Header Ads



ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த, மனோ தலைமையிலான த.மு.கூ


அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று புதன்கிழமை காலை, ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, தமது கூட்டணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், அரசாங்கத்துடன் இணைய மாட்டோமென, தமது நிலைப்பாட்டை அறிவித்ததாக, சந்திப்பின் பின்னர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Well-done Mano, A leader with principle you are an example to other minority leaders, stay with Back borne.

    ReplyDelete

Powered by Blogger.