Header Ads



பாராளுமன்ற ஊழியர்கள், சபாநாயகருக்கு எதிராக போர்க்கொடி - மைத்திரியே பொறுப்புதாரி

பாரளுமன்றத்தின் ஊழியர்கள்  ஜனாதிபதி சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் சபாநாயகரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து வருகின்றனர் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது

அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலிருப்பதற்காக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் சபாநாயகரை விமர்சித்து வருகின்றனர்  என தெரிவித்துள்ள கொழும்பு டெலிகிராவ் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தலைமையிலான பாராளுமன்ற பணியாளர்கள் சபாநாயகரிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளது.

தம்மிம தசநாயக்க தனது பணியாளர்களை சபாநாயகரின் உத்தரவுகளை புறக்கணிக்குமாறு வெளிப்படையாகவே உத்தரவிட்டு வருகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர் என்ற அடிப்படையில் நான் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலையே பின்பற்றவேண்டும் என அவர் குறிப்பிட்டுவருகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதியினால் சட்டவிரோதமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டுவதற்கான சபாநாயகரின் முயற்சிகள் பலனளிக்காத நிலை காணப்படுகின்றது பாராளுமன்ற செயலாளர் நாயகமும் அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க மறுக்கின்றனர் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை தினேஸ் குணவர்த்தன பௌத்த மதகுருமார்களுடன் பாராளுமன்றத்திற்கு சென்று அவைத்தலைவர் பொறுப்பை ஏற்க முயன்ற வேளை, பாராளுமன்ற செயலாளர் நாயகமே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லயின் அலுவலக கதவை திறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து லக்ஸ்மன் கிரியல்ல சபாநாயகரை தொடர்புகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு கோரியவேளை சபாநாயகர் தான் அதிகாரமில்லாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

ஜனாதிபதியையும் புதிய பிரதமரையும் திருப்திப்படுத்துவதற்காக தசநாயக்க   வெளிப்படையாகவே சபாநாயகரின் உத்தரவை ஏற்க மறுத்துவருவதுடன் தான் வர்த்தமானி அறிவித்தலைiயே பின்பற்றவேண்டும் என தெரிவித்துவருகின்றார் என சபாநாயகர் தனக்கு நம்பிக்கைக்குரியவர்களிற்கு தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

இதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி அதற்கு முன்னதாக பாராளுமன்றத்திளை கூட்ட முயன்றால் நானும் எனது பணியாளர்களும் அதற்கு ஒத்துழைக்க மாட்டேன் என சபாநாயகரிற்கு தசநாயக்க  தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.