Header Ads



சபாநாயகருக்கு கிட்டே வந்தால், கொல்வதாக ரஞ்சனும், பாலித்தவும் கத்தியைக் காட்டி மிரட்டினர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவே  நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வருகைத் தந்தாரென, சபாநாயகரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறைபாடு செய்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அருந்திக,

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலையின் போது, சபாநாயகருக்கு இடது புறமாக நின்றுக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப் பெரும ஆகி​யோர் கத்தியைக் காட்டி சபாநாயகரிடம் வந்தால் கொல்வதாக மிரட்டினர்.

சபாநாயகருக்கு இது தொடர்பில் முறையிட்ட போது,  அவர் பொலிஸாருக்கு அறிவிப்பதாக தெரிவித்ததுடன், தானும் நாடாளுமன்றத்தில் உள்ள பொலிஸ் உதவி அத்தியட்சகர் ஒருவரிடம் இது தொடர்பில் தெரிவித்ததாகவும் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.