Header Ads



மைத்திரிபாலவுடன் மீண்டும், இணைந்து பணியாற்ற தயார் - ரணில்

ஜனாதிபதி சிறிசேனவுடன்  மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்து நாளிதழிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இன்னமும் இணைந்து பணியாற்ற தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க எனக்கு அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, என தெரிவித்துள்ளதுடன் இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்கவேண்டு;ம் என குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பில் தனிப்பட்ட பாரபட்சங்களிற்கு இடமில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாரளுமன்றமே அதிஉயர் அதிகாரங்களை கொண்டது இதனையே சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கான போதிய எண்ணிக்கை உள்ளது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர்களிற்கு போதிய பெரும்பான்மையில்லாததன் காரணமாகவே பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அவர்கள் தயங்குகின்றனர் எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தினை கூட்டுவது தாமதமாவது எனக்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இதன் காரணமாக நாடு மேலும் ஸ்திரமின்மையை நோக்கி தள்ளப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவிப்பார்கள் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையயை நிருபித்த பின்னர் எவ்வாறாhன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள் என்ற கேள்விக்கு புதிய அமைச்சரவையை அறிவிக்கவேண்டியிருக்கும் முன்னைய அமைச்சரவையில் இருந்த பலர் சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இணைந்து கொண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையே தொடர்கின்றது என சபாநாயகர் தெரிவித்துள்ளார் அவர்கள் தமது பெரும்பான்மையை நிருபிக்க தவறினால் அந்த நிலையே தொடரும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா என்ற கேள்விக்கு அந்த கேள்வி முடியுமுன்னரே அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.