மகிந்த அணிக்கு ஐரோப்பாவில், தடை விதிப்பது பற்றி எந்த தீர்மானமும் இல்லை
இலங்கையில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் அழுத்தங்களை கொடுத்து வந்தன.
இதனையடுத்து, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில மேற்குலக நாடுகள் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
எனினும், அவ்வாறான நகர்வுகள் எவையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment