Header Ads



சீனாவின் கன்னத்தில் அறைந்த, இலங்கைப் பேராசிரியர்

மாவோ சேதுங்கின் புகழ் மற்றும் சமவுடமையின் கௌரவத்தை அழிக்கும் வகையில் மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தி, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, இலங்கையில் உள்ள சீனத்தூதுவர் ஷியேங் லியேங்க்கிற்கு கடுமை விமர்சனங்களுடன் கூடிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனநாயகம் என்ற வார்த்தை சீனாவுக்கு நெருக்கமில்லாத போதிலும் சமவுடமை என்ற வார்த்தை சீனாவுக்கு நெருக்கமானதல்லவா என கேள்வி எழுப்பியுள்ள பேராசிரியர், ஜனநாயகம் தொடர்பில் நீண்ட வரலாறு இலங்கைக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அரசியல் பிரச்சினைகளை இலங்கை தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அரசியல் கொடுக்கல் வாங்கல்களுக்கு பணம் அவசியமில்லை எனவும் பேராசிரியர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டிக்கு சீனாவிடம் பெற்ற வட்டியை செலுத்த பங்களிப்பவன் என்ற வகையிலும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பவன் என்ற வகையிலும் இந்த விடயங்களையும் அறிவிப்பையும் செய்வதாக பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, சீனத் தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.