மஹிந்த ராஜபக்ஷ்வின் மிருகக்காட்சிசாலை - ஹிருணிக்கா
மஹிந்த ராஜபக்ஷ்வின் மிருகக்காட்சிசாலைபோல் செயற்படுபவர்கள் சபைக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹுருனிகா பிரேமசந்திர, இதனால் அமைதியான முறையில் எமது கருத்துக்களை முன்வைக்க முடிகிறது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் எமது அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் ஊடகங்கள் மீது எந்த தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை. சுதந்திரமாக செயற்பட்டன. ஊடகங்கள் தலைநிமிர்ந்து செயற்படும் வகையில் நாங்கள் அவர்களின் கெளரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இன்று ஊடகங்களின் நிலைமையை பார்க்கும்போது, தற்போது உங்களுக்கு நலமா என்றே கேட்க தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் நேரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment