Header Ads



இன்று இரவு, நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு - ஹர்ஷ டி சில்வா

இன்றிரவு -09- நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அமைச்சர்கள் நியமனம் செய்தபின், 113 உறுப்பினர்கள் இல்லாத நிலையில், இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கவுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அப்படி செய்தால், நம் நாட்டின் உத்தியோகபூர்வ பெயரில் உள்ள “ஜனநாயகம்” என்ற வார்த்தையை அகற்றலாம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.