Header Ads



ஒரு துரும்பையே பயன்படுத்தினேன், தேவையேற்படின் இன்னும் பல துருப்புச் சீட்டுகள் என்னிடம் உள்ளன

தான் பயன்படுத்தியது ஒரு துருப்புச் சீட்​டாகும். தேவையேற்படின், பயன்படுத்துவதற்கு இன்னும் பல துருப்புச் சீட்டுகள் என்னிடம் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் எடுத்த தீர்மானத்தை எக்காரணம் கொண்டும் மீளப்பெற்றுக்கொள்ளமாட்​டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பு நல்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அவ்வாறு இல்லாவிடின் அரசமைப்பின் பிரகாரம், சட்டரீதியான முன்னெடுக்கக்கூடிய துருப்புச் சீட்டு தன்னிடம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

4 comments:

  1. he was appointed to rule the country and not to play cards...........

    ReplyDelete
  2. How many times he said like that. All lies

    ReplyDelete
  3. get lost My3 you aren't the right person to rule the country. You are a big liar, grate story creator and the Betrayer.

    ReplyDelete

Powered by Blogger.