Header Ads



பொலிஸ்மா அதிபர், கைது செய்யப்பட்டால்..?

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு, பாதுகாப்பு செயலாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டால், பொலிஸ் மா அதிபர் பதவியை அவர் இழக்கும் நிலை ஏற்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.