பாராளுமன்றம் கூச்சல், குழப்பத்துடன் ஆரம்பம்
நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவுக்குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில், தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, மகிந்த சமரசிங்க, எஸ்.பி.திசநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, ஆகிய 5 பேரும்,
ஐதேக சார்பில், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல ஆகிய ஐந்து பேரும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா மற்றும் ஜேவிபி சார்பில் விஜித ஹேரத்தும், தெரிவுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
Post a Comment