Header Ads



பாராளுமன்றம் கூடியது, மஹிந்த - மைத்திரி அரசாங்கத்துக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை முன்வைப்பு

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று -30- முற்பகல் 10.30க்கு கூடியது. இதன்போது, சபாநாயகளின் விசேட அறிவிப்புக்குப் பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினால், மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

பொதுமக்களின் பணத்தைக் கொண்டு, அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது விடயதானங்களுக்காக, எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யக்கூடாதென்றும் அதற்கு, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லையென்றும் கூறியே, இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதை, ஐ.தே.முவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வழிமொழியப்பட்டது.

இந்தப் பிரேரணையானது, நாடாளுமன்ற உறுப்பினர்களான, ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, மனோ கணேசனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் இணைந்தே கொண்டுவந்தனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதென, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கே உள்ளதென, இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.