Header Ads



கரு ஜயசூரிய பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சந்திக்க நேரிடும்

சபாநாயகருக்கு எதிராக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய பதவியை இராஜினாம செய்ய வேண்டும் என அகில இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

நெழும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அகில இலங்கை உள்ளூராட்சி மன்ற சங்கங்களின் தலைவர் அத்துவேவில மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்காக செயற்படும் சபாநாயகர் நாட்டுக்கு அவசியமில்லை. அத்துடன் கரு ஜயசூரிய பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. எதுக்குடா அவர் இராஜினாமா செய்யனும்

    ReplyDelete

Powered by Blogger.