நல்லாட்சி அமைச்சர்கள் மீண்டும், பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் - ராஜித
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சுக்களுக்கு சென்று பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கு செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பை அடுத்து நாடாளுமன்றம் நாளை தினம் கூடப்பட உள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சட்டவிரோதமானது என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Moda choon..
ReplyDelete