Header Ads



சிறை செல்லவும், ஜம்பர் அணியவும் தயார் - கரு ஜயசூரிய

சிறை செல்லவும் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று -27- இடம்பெறும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பு விடுத்துள்ளார்.

நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குச் சென்று காற்சட்டை அணியவும் தயாராக இருக்கின்றேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் மீண்டும் கூடியது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுப்பினார்.

சபாநாயகர் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார். இதற்காக சிறைக்குச் செல்ல வேண்டிவரும். எனவே காற்சட்டை அணிவதற்கு தயாராக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,

“நான் எந்தவொரு போலி ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். நீதியை நிலைநாட்டியதற்காக ஜனநாயகத்தை பாதுகாத்ததற்காக ஜம்பர் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் செய்வதற்கு தயார். நான் நடுநிலை தவறி செயற்படுகின்றேன் என்றால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வாருங்கள்” என்றார்.

1 comment:

  1. கள்ளக்கூட்டமும்,அநியாயக்காரர்களும் இலக்குவைப்பது நீதியாகவும் நியாயமாகவும நடந்து கொள்ளும் நபர்களைத்தான். அதற்கு சபாநாயகர் மிகவும் சிறந்த உதாரண புருஷர்.எந்த இடத்திலும் நடுநிலைமையாகவும் முடிந்தவரையில் நேர்மையாகவும் நடந்துகொள்ள முயற்சி செய்பவர்களை அராஜகம் செய்யும், களவும் சூழ்ச்சியும் செய்து கொண்டிருப்பவர்களின் முதல் எதிரி அவர்தான். சனாதிபதியின் கபட சூழ்ச்சி நாடகம் சரியாக நடந்தேற தடையாகவும் முட்டுக்கட்டையாகவும் இருப்பது சபாநாயகர் தான். அவரைத்திட்டி,அவருக்கெதிராக சூழ்ச்சி செய்தால் அவர் அகன்று ஓடிவிடுவார் என சூழ்ச்சிக்காரர்கள் கற்பனையில் முழ்கியிருக்கின்றார்கள். எனவே தான் தாறுமாறாக சபாநாயகரை விமர்சிக்கவும் திட்டவும் ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனால் இவர் மனஉறுதியும் கொள்கையில் உறுதியாகவும் இருப்பவர். அவரை இலகுவில் மடையனாக்கிவிட முடியாது என்ற சீற்றம் தான் தற்போது இந்த அராஜக கள்ளக்கூட்டத்துக்கு இருப்பது. இன்னும் சற்று பொறுத்து இருந்து பார்ப்போம். நிச்சயம் உண்மை சத்தியம் வெல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.