Header Ads



இலங்கையின் பிரதமர் ரணில்தான், அலரி மாளிகையிலேயே அவர் தங்கியிருப்பார் - ஐ.தே.க.


இலங்கையின் பிரதமர் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க தான் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்ரமசிங்க தங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை மேற்கொள்வதாக அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.