Header Ads



வெடிப்புச் சத்­தத்­துடன், முஸ்­லிம்­ கடைககளுக்குள் பரவிய தீ - நெருப்பு எப்­படி வந்­ததென்பது புதி­ராக உள்ளது...?


பாணந்­துறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பாணந்­துறை தொட்­ட­வத்த பிர­தான வீதியில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு கடைகள்  தீயினால் எரிந்து முழு­மை­யாக  சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.25 மணி­ய­ளவில் இவ்­வ­னர்த்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. சென்ட்ரல் ஹார்ட்­வெயார் எனும் இரும்புக் கடை­யொன்று, பிளாஸ்ரிக் அலு­மி­னியம் கடை­யொன்று, புடவைக் கடை­யொன்று மற்றும் இரும்புப் பொருட்­க­ளுடன் தொடர்­பு­பட்ட கடை­யொன்று என நான்கு கடைகள் தீயினால் முற்­றாக எரி­யுண்­டுள்­ளன.

“எங்­க­ளது ஹார்ட்­வெயார் கடைக்கு ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மாக நஷ்­ட­மேற்­பட்­டுள்­ளது. நாம் அதி­க­மான பொருட்­களைக் களஞ்­சி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருந்தோம். ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.00 மணிக்கு கடையை மூடி­விட்டு நான் வீட்­டுக்குச் சென்றேன். சென்று சிறிது நேரத்தில் ஒரு வெடிப்புச் சத்­தத்­துடன் கடைக்­குள்­ளி­ருந்து தீ பர­வி­யுள்­ளது. கடைக்கு முன்னால் தங்­கி­யி­ருந்­த­வர்கள் எனக்கு தொலை­பேசி மூலம் 08.25 மணிக்கு அறி­வித்­தார்கள். நான் உட­ன­டி­யாக திரும்பி வந்தேன். எனது கடையும் ஏனைய கடை­களும் எரிந்து கொண்­டி­ருந்­தன.

மின் ஒழுக்கு ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்பே இல்லை. நான் எல்லா சுவிட்­சு­க­ளையும் பார்­வை­யிட்டு ஓப் பண்­ணி­யி­ருந்தேன். இந்­நி­லையில் கடைக்குள் எப்­படி நெருப்பு வந்­தது என்­பது புதி­ராக இருந்­தது. பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்தி இதற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய வேண்டும்.

தீய­ணைப்புப் படை­யினர் ஒரு மணித்­தி­யா­லத்தின் பின்பே வந்­தனர். ஐந்து தீய­ணைப்பு வாக­னங்கள் நெருப்­பினை அணைக்கும் கட­மை­களில் ஈடு­பட்­டன. என்­றாலும் தீயினை முழு­மை­யான அணைக்க முடி­யா­மற்­போ­னது. இத­னாலே கடைகள் முழு­மை­யாக சேதங்­க­ளுக்­குள்­ளா­கின.

மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் முஸ்­தபா நேர­டி­யாக வந்து நிலை­மை­யினைப் பார்­வை­யிட்டு ஆறுதல் கூறினார். இப்­ப­கு­தியில் இன முரண்­பா­டுகள் ஏற்­ப­டா­வண்ணம் பாது­காக்­கு­மாறும் வேண்டிக் கொண்டார் என்றார்.

தீயினை அணைப்­ப­தற்­காக களுத்­துறை, ஹொரணை மற்றும் மொரட்­டுவை பகு­தி­க­ளி­லி­ருந்து தீய­ணைப்புப் படை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். தொடர்ந்தும் சம்­பவம் நடை­பெற்ற பகு­திக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. பாணந்­துறை தெற்கு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் பைசர் முஸ்தபா பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், தீ பரவலுக்கான காரணத்தை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸாரை வேண்டியுள்ளார்.
ஏ.ஆர்.ஏ. பரீல்

5 comments:

  1. இந்த கடை பாணந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ளது. தொட்டவத்தை நபருக்கு சொந்தமான கடை தொகுதி.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    கரிக்கு பொலிஸ்காவல் தேவயில்லை, யாரும் அள்ளிக்கொண்டு ஓடமாட்டார்கள். நஷ்டமடைந்தவர்கள் விசாறணை முடிவில் திருப்தியடயுமளவு பொலீஸார் நடந்தால் அதுவே போதும்.

    ReplyDelete
  3. its time to fix high definition video camera. should have done it before.

    ReplyDelete
  4. Has the owner insured his shops? If not, it's high time Muslims think of this.

    ReplyDelete

Powered by Blogger.