Header Ads



எந்நாளுமே..... !



அளுத்கமையைப் பற்றி
அடிக்கடி பேசு
வாய் திறக்காதே. 
அம்பாறை கொத்து
வாயில் இறுகிக்கொள்ளும்!
கிந்தொட்டை ஜின்கள்
கழுத்தை நசுக்கிப்போடும்!

வெள்ளை வேனை மட்டும்
அடிக்கடி ஞாபகப்படுத்து.
திகனவுக்கு வந்த
கறுப்பு வேன்களை
கனவிலும் நினைக்காதே.

அளுத்கமை விசாரணை
கமிஷனை மறந்துவிடு.
கைகளில் கிடைக்கம்
கமிஷனை எண்ணிப்பார்.

முந்திரிக்கொட்டை மாதிரி
முந்திக்கொள்.
பிரதமரை ராஜினாமா
செய்யச்சொல்.

அணில் தலையிலே
ஆயிரம் முறை எச்சமிட்டாலும்
அமைதியாக இரு;
மத்திய வங்கியின்
பங்குப் பணம் வருமோ!

மகாராஜாவை
திட்டிக்கொண்டிரு.
மகாஜனங்களை
முட்டாளாக்கலாம்!

வரப்போகுது 
தேர்தல்.
ஆக்ரோஷமாகப் பேசு
அந்த மாவட்டம்
இந்த மாவட்டம்....
சனங்களை மறந்துவிட்டதுபோல
சனங்களும் மறந்து விடுவார்கள்.

அப்பாவிச் சனங்களின் வாக்குகளை
பாவிகளுக்கு மொத்தமாக விற்று
ஆளுங்கட்சியில் எந்நாளுமே இரு .

கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்   ✍🏻 

3 comments:

  1. பாசிச புலி பயங்கர வாதிகள் வட, கிழக்கு முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை. மேலேயுள்ள கவிதையில் குறிப்பிடப்பட்ட இடங்களில் பௌத்தர்கள் செய்த அநியாயங்களோடு ஒப்பிடும் போது கொஞ்சம் பரவாயில்லை.

    தங்கள் சொந்த இடங்களை விட்டே விரட்டி அடித்தார்கள் அந்த கயவர்கள். அவர்கள் அவர்களாலேயே அழிந்தது போல தற்போது தென்பகுதியில் நடக்கிறது.

    ReplyDelete
  2. Ennda naaiyhalukku ethai vida oru seruppadi thevaiyaaa

    ReplyDelete

Powered by Blogger.