Header Ads



"மஹிந்த பிரதமரானதால், ஞான­சாரருக்கு மன்­னிப்பு கிடைக்கும் என்­கி­றார்கள்"

-ARA.Fareel-

மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதால் இப்­போது ஞான­சார தேர­ருக்கு விடு­தலை கிடைக்கும், பொது மன்­னிப்பு கிடைக்கும் என்­கி­றார்கள். ஆனால் அர­சி­யல்­வா­திகள் மீது எமக்கு நம்­பிக்­கை­யில்லை. அவ­ரது விடு­த­லைக்­காக நாம் சட்ட ரீதி­யான முயற்­சி­க­ளையே மேற்­கொள்வோம் என சிங்­களே அபி அமைப்பின் தலைவர் ஜம்­பு­ர­வேல சந்­த­ர­தன தேரர் தெரி­வித்தார்.

நேற்று ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

கடந்த 3 ½ வருட கால நல்­லாட்சி அர­சாங்­கத்தில் சட்­டமும் நீதியும் நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. நாட்­டுக்­கா­கவும் மதத்­துக்­கா­கவும் குரல் கொடுத்த குரு­மார்­களும் பிரி­வி­னை­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்டைக் காப்­பாற்­றிய இரா­ணுவ வீரர்­களும் சிறையில் அடைக்­கப்­பட்­டார்கள். எமது வளங்கள் வெளி­நாட்­டுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டன.

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக 1 ½ மாத காலத்­துக்குள் 7 வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டன. அவரை மௌனிக்கச் செய்­வ­தற்­கான சதி­யா­கவே நாம் இதனைக் கரு­து­கிறோம்.

ஞான­சார தேர­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள தண்­டனை தொடர்பில் எமக்குச் சந்­தேகம் உள்­ளது. கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் சுமார் 100 குருமார் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

புதிய பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட நளின் பெரேரா தான் பத­வி­யேற்­ற­போது தெரி­வித்த கருத்­துகள் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். நீதி­ப­திகள் மீது ஏதும் முறைப்­பா­டுகள் இருந்தால் அவற்றை எனக்­க­னுப்­புங்கள். இன்றேல் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்­புங்கள் என்று தெரி­வித்­துள்ளார். அதனால் எமக்கு நம்­பிக்­கை­யுள்­ளது.

ஞான­சார தேரர் விவ­கா­ரத்தில் நாம் சட்­டத்தின் மூலமே தீர்­வினை பெற்­றுக்­கொள்ள வேண்டும். கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற புதிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வான பேர­ணியில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொண்­டார்கள். கொட்டும் மழையைக் கூட அவர்கள் பொருட்­ப­டுத்­த­வில்லை.

அவர்கள் ஏன் மழையில் திரண்­டி­ருந்­தார்கள். 3 ½ வருட கால ஆட்­சியில் மாற்றம் அவர்­க­ளுக்குத் தேவைப்­பட்­டுள்­ளது. இதனாலேயே மக்கள் இன்று கிளர்ந்தெழுகிறார்கள்.

நாட்டின் அரசியலில் இன்று ஸ்தீரமற்ற நிலைமை உருவாகியுள்ளது. அதனால் பாராளுமன்றத்தைக்கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுங்கள் என்றே நாம் கூறுகிறோம் என்றார்.

2 comments:

  1. அது வேறொறு வழியில் நடக்கும்.

    ReplyDelete
  2. மகிந்த ஆட்சியை பிடித்தால், ஞானசேர பிக்கு மந்திரி, பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சர்

    ReplyDelete

Powered by Blogger.