Header Ads



வைத்திய கலாநிதி அஸாத் எம் ஹனிபாவின், “தம்பியார்” கவிதை நூல் வெளியீடு




கவிஞர் மருத்துவர் அஸாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நூலான “தம்பியார்”  வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  எதிர்வரும் 2018.11.18 ஞாயிற்றுக் கிழமை  காலை 9.33 மணிக்கு காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறும். 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஞானம் சஞ்சிகை ஆசிரியர்  டாக்டர் தி. ஞானசேகரன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான அல்ஹாஜ் என். எம். அமீன், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் தலைவர் திரு. செந்தில் வேலவர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். 

சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி வரவேற்புரையாற்றுவார். நூலின் முதல் பிரதியை இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். “தம்பியார்” நூலின் நயவுரையை சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் நிகழ்த்துவார். காவ்யாபிமானி கலைவாதி கலீல் அவர்களின் கவி வாழ்த்தும் இடம்பெறும். நூலாசிரியர் அஸாத் அவர்கள் ‘ஆத்மாவின் புண்’ மற்றும் ‘பிரேத பரிசோதனைகள்’ எனும் இரு கவிதை நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.