குத்பாவை சுருக்கி, தொழுகையை நீட்டிக் கொள்ளுங்கள் - ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய அறிவுரை
குத்பா பிரசங்கங்களை சுருக்கி தொழுகையை நீட்டிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களின் கதீப்மார்களையும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் கோரியுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பெரும்பாலான பள்ளிவாசல்களில் மதியம் 1.30 மணியையும் கடந்து ஜும்ஆ பிரசங்கங்கள் நடைபெறுவதாக உலமா சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஜும்ஆ தொழுகைக்காக குறுகிய நேர விடுமுறையைப் பெற்றுவரும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பல சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
கதீப்மார்கள் குத்பாவைச் சுருக்கி தொழுகையை நீட்டிக் கொள்வதே சன்மார்க்கத்துக்கான சிறந்த அடையாளமாகும்.
குத்பா பிரசங்கங்கள் நீண்ட நேரம் இடம்பெறுவதால் வயதானவர்கள் மற்றும் நோயாளர்களும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக குத்பா பிரசங்கங்களை சுருக்கிக் கொள்ளுமாறு உலமா சபை ஆலோசனை வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளது.
-Vidivelli
சிறந்த ஒர் ஞேயல் உன்மையிழ் குவைத் பேன்ற அரபி நாட்டில் 15'20 நிமிடம் தான் ஜும்மா மிக்க மகிழ்ச்சி இலங்கையில் இவ்வாறு ஒரு நிலமை வருவது இற்று.
ReplyDeleteஇதுதான் நபியின் சுன்னாவும் ஆகும்.
ReplyDeleteசுன்னாவினை நோக்கி ACJU... Alhamdulillah
பல பேர் தூக்கம்
ReplyDeleteKuthba and prayer should be completed before 1:30 to avoid conflict with school traffic, which starts at 1:30.
ReplyDeleteWe are always with ACJU AND it is guiding all the Muslims in Sri Lanka beyond any doubt. However I am personally not agreeable with the above request because the purpose of the Juuma is lost. We were told and taught the jumma is conducted on Fridays to make aware of the happenings against the Islamic teaching during that week and explain the wrong thing and right thing for no repetition of wrong thing instead to follow right thing. Therefore you need more time like at present. It would be appreciated if it is revisited and reconsidered. Please note that I am not for any argument because it is not advised in Islam.
ReplyDelete