Header Ads



கமர் நிசாம்டீன் இன்று, இலங்கையை வந்தடைந்தார்

அவுஸ்திரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த கமர் நிசாம்டீன் இன்று -05- இலங்கையை வந்தடைந்தார்.

25 வயதுடைய பல்கலைக்கழக மாணவனான கமர், குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புப்பட்டு அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கம் டேன்புல் மற்றும் பிரதிப் பிரதமர் ஜூலி பிஸ்ப் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் குறிப்பு புத்தகம் ஒன்றை வைத்திருந்ததாக கமர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவர் நான்கு வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் நிரபராதி என்ற அடிப்படையில் அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் வெகுஜனப்போராட்டங்களை முன்னெடுத்தனர்

1 comment:

  1. Many International SriLankan champion came like nothing but..

    He Landed to SriLanka Like a big Non Muslim Hero's.
    He is Hero Religion/Islam is Zero... We have seen it in Airport welcoming..

    ReplyDelete

Powered by Blogger.