ரணிலையே பிரதமராக நியமிக்க வேண்டும் - ஐ.தே.க. உறுதியானதும், இறுதியானதுமான தீர்மானம் நிறைவேற்றம்
பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐ.தே.கவின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரை மாத்திரம் திருப்தி படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றியமைக்க முடியாது ஜனாதிபதிக்கு விருப்பமில்லை என்பதற்காக பெரும்பான்மையை பெற்றவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு சரத்தை மீற முடியாது என ஐ.தே.க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
Post a Comment