Header Ads



மத்தலையில் 8 ஆவது தடவையாக தரையிறங்கிய, விமானத்தினால் எவ்வாளவு வருமானம் தெரியுமா..?


உலகில் இரண்டாவது மிகப் பெரிய அன்டனோவ் 124 விமானமானது இன்று பகல் 1.50 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வருடத்தில் மாத்திரம் 8 தடவைகள் குறித்த விமானம் மத்தலையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

 ஜகார்த்தா வரை பயணித்த குறித்த விமானம் எரிபொருளை நிரப்புவதற்காகவே மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறக்குவதற்காக, 1568 டொலர்களும் நிறுத்தி வைப்பதற்காக 471 டொலர்களும் சேவைகளுக்காக 3000 டொலர்களும் மத்தல விமான நிலையத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விமானத்துக்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்காக 98 இலட்ச ரூபாய் செலுத்தப்பட்டு, 83586 லீற்றர் எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்தலையில் தரையிறக்கப்பட்டுள்ள இந்த விமானம் நாளை அதிகாலை 3 மணிக்கு ஜகார்த்தா நோக்கி பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.