Header Ads



பாராளுமன்றம் கலைப்பு - வழக்கை விசாரணைசெய்ய 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழு நியமனம்

நாடாளுமன்றை கலைப்பதற்காக ஜனாதிபதியால் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளின் போது, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தலைமை நீதியரசர் தலைமையிலான 3 நீதியரசர்கள் அடங்கிய குழு இடைக்கல தடையை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.