Header Ads



மகிந்தவை புகழ்ந்து தள்ளிய மைத்திரி - 4 வருடங்களின் பின் ஒரே மேடையில் இருப்பதாக பெருமிதம்

4 வருடங்களின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒரே மேடையில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இடம்பெறும் மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நவம்பர் மாதம் என்பது ஆச்சிரயமூட்டும் மாதமாகும். 2014ஆம் ஆண்டு  இதே நவம்பர் மாதம் தான் மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவையிலிருந்து விலகியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருடம் நவம்பர் மாதம் தாமிருவரும் ஒரே ​மேடையில் அமர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த பிரதமர் கதிரைக்காக, நாட்டுக்கும், தேசத்துக்கும்  பொருத்தமான வெளிநாட்டு அரசியல் கோட்பாடுகளை நிராகரிக்கும் ஒருரையே பிரதமாக தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Ha....Brooootus.... Kapada naadaga vittagan....#1 enemy of democracy...
    We have expected from u a lot on 2015 but shame to see ur face....
    U r the dangerous person in Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.