Header Ads



நீர்கொழும்பு - சிலாபம் வீதியில் விபத்து, 4 பேர் பலி, 20 பேர் காயம்


நீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் சொகுசு பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி எமில்டன் கால்வாயில் வீழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று -29- பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிர்ழந்தவர்களுள் 3 பெண்களும் அடங்குவதாகவும் இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.