Header Ads



சிறிசேனவின் தரப்பினர் 3000 மில்லியனை வழங்கி, என்னை சிறையில் அடைக்க முயற்சி

அலரி மாளிகையில் இன்று -07- நடைபெற்ற ஊடக சந்திப்பில் சரத் பொன்சேக்கா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

மாகந்துரையில் மதுஷ்க என்ற ஒருவர் இருந்தார். 

இன்று பிரபல தலைவர் ஒருவர் அவர்களுடன் கதைத்து சிறிசேனவின் தரப்பினர் 3000 மில்லியனை கொடுப்பதாகவும் முதலில் 1500 மில்லியனையும், வேலையை முடித்த பின்னர் எஞ்சிய 1500 மில்லியனையும் கொடுப்பதாகப் பேசப்பட்டுள்ளது. 

மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டமிடுவதற்காக உதவுமாறு சரத் பொன்சேக்கா பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருடன் பேசியதாக குரல் பதிவொன்றை வழங்குமாறு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். 

அவ்வாறான விடயமொன்றை உருவாக்கி, பாதாள உலகத் தலைவர்களுக்கு 3000 மில்லியனை வழங்கி, எம்மை சிறையில் அடைக்க முயல்கின்றனர்.

1 comment:

  1. மிஸ்டர் பொன்சேகா, நீங்கள் சிறையில் இருக்க வேண்டிய ஆள்தான், சந்தேகமே இல்லை. உங்களை சிறையில் போடுவதற்கு அவ்வளவு பணம் எல்லாம் எதற்கு, நூறு ரூபாயே வேஸ்ட். சும்மா புருடா விட வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.