Header Ads



அமெரிக்காவில் 2 சவூதி, சகோதரிகள் படுகொலை


(விடிவெள்ளளி)

அமெ­ரிக்­காவில் கல்வி கற்று வந்த சவூ­தியைச் சேர்ந்த அரே­பிய சகோ­த­ரிகள் இருவர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­களை வொஷிங்­ட­னி­லுள்ள சவூதி அரே­பிய தூத­ர­கத்தின் பேச்­சாளர் மறுத்­துள்ளார்.

அதிர்ச்சி ஏற்­பட்­ட­மைக்­கான எந்­த­வித அடை­யா­ளங்­க­ளு­மின்றி 22 வய­தான ரொட்­டானா பரீயா மற்றும் அவ­ரது சகோ­த­ரி­யான 16 வய­தான தாலா ஆகிய இரு­வரும் கடந்த ஒக்­டோபர் மாதம் 24 ஆம் திகதி ஹுட்சன் ஆற்­றங்­க­ரையில் சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டனர்.

கறுப்பு நிற முழு­மை­யான ஆடை அணிந்­தி­ருந்த இரு­வ­ரி­னது கால்­களும் கைகளும் பிணைத்துக் கட்­டப்­ப­டி­ருந்­தன.

அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வெளி­யே­று­மாறு தமது குடும்­பத்­திற்கு வொஷிங்­ட­னி­லுள்ள சவூதி அரே­பிய தூத­ர­கத்­தி­லி­ருந்து தொலை­பேசி மூலம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தாக உயி­ரி­ழந்த சகோ­த­ரி­களின் தாயார் அமெ­ரிக்க புல­னாய்­வா­ளர்­க­ளிடம் தெரி­வித்­த­தாக உள்ளூர் ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன.

இரு சகோ­த­ரி­களும் அமெ­ரிக்­காவில் அர­சியல் தஞ்சம் கோரி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  எனினும் குறித்த பெண்­க­ளுக்கு சவூதி திரும்­பு­மாறு உத்­த­ர­வி­டப்­ப­ட­வில்லை என சவூதி அரே­பிய தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

அர­சியல் தஞ்சம் கோரி­யி­ருந்­தத சவூதி அரே­பிய சகோ­த­ரி­களை அமெ­ரிக்­காவை விட்டு வெளி­யேறி மீண்டும் சவூதி அரே­பி­யா­வுக்கு செல்­லு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல்கள் பொய்­யா­னவை என பாத்­திமா பைசன் கடந்த சனிக்­கி­ழமை டுவிட்­டரில் தெரி­வித்­தி­ருந்தார். விப­ரங்கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவை காலக் கிர­மத்தில் வெளி­யி­டப்­படும் எனவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

வேர்­ஜீ­னி­யா­வி­லுள்ள தமது குடும்­பத்­தி­னரில் இல்­லத்­தி­லி­ருந்து இரு சகோ­த­ரி­களும் வெளி­யே­றி­விட்­ட­தா­கவும் 2017 ஆம் ஆண்டின் இறுதிப் பகு­தி­யி­லி­ருந்து அவர்கள் அங்கு வசித்­தி­ருக்­க­வில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அவர்களுக்கு என்ன நடந்தது என தீர்மானிக்க முடியாமலிருக்கின்றது. அவர்களது வீட்டிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அதிகமான தொலைவிலுள்ள ஆற்றங்கரைக்கு எவ்வாறு வந்தார்கள் என்பது குழப்பமாக இருப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. சவூதி தூதரகம் செய்த இன்னொரு கொலையா?

    ReplyDelete

Powered by Blogger.