Header Ads



மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி

-Tw-

24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி நியமித்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி, இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் ஏனைய அனைத்து கட்சிகளும் ஒரு கூட்டணியாக இருப்பதால், தான் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி நிரூபிக்கும் பெரும்பான்மையை தொடர்ந்தும் நிராகரிப்பது சிக்கலுக்குரியது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.