19 தான் எல்லாவற்றுக்கும் காரணம் - கோத்தபாய
19ம் திருத்தச் சட்டத்தினால் நாடு ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அஹூன்கல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த அரசாங்கம் எதேச்சதிகார போக்கில் 19ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் நாட்டில் குழப்ப நிலைமைகள் உருவாகியுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திருத்தச் சட்டமானது தனிப்பட்ட அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
நானோ, பசில் ராஜபக்சவோ தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை நான்கரை ஆண்டுகளுக்கு கலைக்க முடியாது என்ற சரத்தினையும் சரியாக கொண்டு வரவில்லை.
அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் போன்று மற்றொரு குடும்பம் ஆட்சிக்கு வந்து நாட்டைச் சூறையாடி,மக்களின் சொத்துக்களைக் களவாடி,நாட்டையும் மக்களையும் அதளபாதாளத்தில் தள்ளக்கூடிய எந்தக்குடும்பங்களும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற காரணத்தால் தான் அந்த சட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது.
ReplyDeleteதாங்களும் தங்கள் குடும்பமும் ஆட்சியே குறிக்கோள்...
ReplyDelete19TH AMENDMENT TO STOP MR FAMILY AND ALIBABA GANGS TO DESTROY THIS COUNTRY.YAHAPALANE MISSED TO PUT YOUR IN JAIL.THIS IS THE VERY BIG FAULY OF MY3 RANIL MISTAKES.
ReplyDelete19TH AMENDMENT TO STOP MR FAMILY AND ALIBABA GANGS TO DESTROY THIS COUNTRY.YAHAPALANE MISSED TO PUT YOUR IN JAIL.THIS IS THE VERY BIG FAULTY OF MY3 RANIL MISTAKES.
ReplyDeleteAmerican citizen waitrukkum iwanukku engal naattai Patrick pesuwatatku endha urimayum illai.
ReplyDelete