Header Ads



14 ஆம் திகதி முன், 13 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்

நாடாளுமன்ற புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரையும் நியமிக்கும் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கான வர்த்தமானி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தற்போது வரையில் 17 அமைச்சர்கள், 9 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 9 பேர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள மேலும் 13 அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் என மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.