Header Ads



அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு, எதிரான பிரேரணை நிறைவேற்றம் - ஆதரவாக 122 வாக்குகள் குவிந்தன

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாட்டாளி சம்பிக்க ரணவக்கவினால் சமர்பிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.