Header Ads



மைத்திரி வைத்த "செக்" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...?

நாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரினதும் பெயர் அழைக்கப்பட்டு அவர்களின் குரல் வாக்குகள் பதியப்பட வேண்டுமென இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்ரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலும் அது சொல்லப்பட்டுள்ளது...

அப்படியாயின் இதனூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜே வீ பியினருக்கும் “ செக்” வைத்துள்ளார் மைத்ரி...

பிரதமர் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கே மேற்படி இரண்டு கட்சிகளும் ஆதரவை தெரிவித்தன. ஆனால் அது ரணிலை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான ஆதரவில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்...

ரணிலை ஆதரித்து இப்போதுள்ள அரசியல் நிலைமைகளில் வேறு அரசியல் தாக்கங்களை எதிர்கொள்ள கூட்டமைப்பும் ஜே வீ பியும் விரும்புமா என்பதே இப்போதுள்ள கேள்வி...

இவர்கள் இல்லாமல் ரணில் 113 எடுப்பாரா? நாளை எல்லாம் தெரிந்துவிடும்..

மொத்தத்தில் இது அவர்களுக்கு சத்தியசோதனை.. அக்கினிப் பரீட்சை ..

( ஜனாதிபதி ஊடக செய்திக் குறிப்பு இத்துடன் இணைப்பு )

-Ramasamy Sivarajah-




4 comments:

  1. Why Ranil? Elected PM Mahinda should show 113.

    ReplyDelete
  2. Is it the standard way ? or only for Ranil

    ReplyDelete
  3. இவர் அடிக்கும் அத்தனை துரும்புகளும் மண்ணைக்கவ்வும். இந்த நாட்டு மக்கள் நன்றாகப் பாடம் படிக்க வேண்டும் கிராம சேவகர்களை நாட்டின் சனாதிபதியாக தெரிவு செய்தால் கிராம சேவகரின் சூழ்ச்சியும் தந்திரமும் மக்களுக் கோ நாட்டுக்கோ பயன்படாது. வெறும் நேரமும் பணமும் வீணடிப்பும் மக்களை மென்மேலும் கஷ்டத்தில் ஆழ்த்துவதும் மட்டும்தான்.

    ReplyDelete
  4. I think this is also a good move to kick ranil out first...

    ReplyDelete

Powered by Blogger.