Header Ads



பௌத்த தலைவர்களை சிறைப்படுத்தி, கொலைசெய்ய திட்டம்

இலங்கையிலுள்ள பௌத்த தலைவர்களை சிறைப்படுத்தி கொலை செய்தாவது இலங்கையை பலவீனப்படுத்தி இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை மாற்றுவதற்கு திட்டம் தீட்டப் படிட்ருந்தமை நாலக சில்வா விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியரிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரரின் சிறைப்படுத்தல் நடவடிக்கை அவரை தனிமைப்படுத்துவதற்கான ஒரு முயற்சி மாத்திரம் அல்லவென்பது கைது செய்யப்பட்ட இந்தியரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் மூலம் வெளியாகியுள்ளது.

இந்த இந்தியர் சிங்கள இளைஞர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்திருந்த செய்தி முக்கிய ஒன்றாகும். அதில், இந்த நாட்டிலுள்ள சிங்கள தலைவர்களை சிறைப்படுத்தியோ அல்லது கொலை செய்வதன் மூலமாகவோ இந்தியாவுக்கு தேவைப்படும் பொம்மை ஆட்சியொன்றை இந்நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையை இந்தியாவின் பிராந்தியமாக வைத்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரரை தொடர்ந்தும் சிறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக பாதையில் இறங்கி போராட்டம் நடாத்தப் போவதாகவும்  தேரர் மேலும் குறிப்பிட்டார்.

ஞானசார தேரரின் சுகதுக்கம் விசாரிக்க நேற்று சிறைச்சாலைக்குச் சென்றிருந்த போது ஊடகங்களிடம் தேரர் இதனைக் கூறினார்.

1 comment:

  1. ஆட்சியாளர்களை பகடைக்காய்களாக நினைத்துக்கு கொண்டு இந்த மஞ்சல் காவிகள் படுத்தும் மடத்தனமான காய்நகர்ப்பு.இதன் பின்னணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளியை விடுதலை செய். அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.