Header Ads



ஒரேசூலில் பிறந்த அம்ஹர், அம்ரா, அப்கர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி


ஒரே சூலில் பிறந்த மூன்று மாணவர்கள் எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

அஸ்கன்குல வீதியைச் சேர்ந்த எம்.எச்.எம் அஹ்ஸன் மற்றும் பாத்திமா முபீதா தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு ஒரே சூலில் பிறந்த மூன்று குழந்தைகளே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர்.

எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மூன்று பிள்ளைகளும் அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாத்திமா அம்ரா 184( மாவட்டத்தில் நான்காம் இடம்) அஹமட் அப்கர் 181 (மாவட்டத்தில் ஆறாம் இடம்) அஹமட் அம்ஹர் 164 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

6 comments:

Powered by Blogger.