Header Ads



திகன பேருவளை கலவர சூத்திரதாரிகள் அமைச்சரவையில் இருக்கிறார்கள் - மஹிந்த

பேரு­வளை அளுத்­கம கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார்? ஏன் அந்த இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்­கி­னார்கள் என்­பது இன்று வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. இந்த கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் அது­பற்றி பேசி­ய­வர்கள் எல்­லோரும் இன்று அமைச்சர் பத­வி­களில் இருக்­கி­றார்கள். இது­பற்றி மக்கள் இன்று அறிந்து கொண்­டுள்­ளார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். இரத்­தி­ன­புரி புதிய நகர் மத்­திய வாசி­க­சாலை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே, அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, இன்று அர­சாங்கம் நல்­லி­ணக்கம் என்ற போர்­வையில் இனங்­க­ளுக்­கி­டையில் பல்­வேறு வேறு­பா­டு­களை உரு­வாக்கி அரசு குரோ­தங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. நல்­லி­ணக்கம் என்­பது இனங்­க­ளுக்­கி­டையில் பேதங்­களை உரு­வாக்­கு­வ­தாக அமை­யக்­கூ­டாது. அளுத்­கம கல­வ­ரத்தை உரு­வாக்­கி­ய­வர்கள் அந்தச் சம்­ப­வத்தை அர­சாங்­கத்தைக் -கவிழ்ப்­ப­தற்கு சாத­க­மாகப்  பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள்.

இதே­போன்று கண்டி – திகன வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பது இப்­போது தெளி­வா­கி­யுள்­ளது. நாமல் குமார வெளி­யிட்­டுள்ள தக­வல்கள் பல உண்­மை­களை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஜனா­தி­பதி கொலை சதி­மு­யற்சி மற்றும் எனது குடும்­பத்­தி­னரை கொலை செய்ய சதி முயற்சி என்­பன தொடர்பில் இந்­தியர் ஒரு­வரும் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார். சம்­ப­வங்கள் தொடர்பில் எவரும் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை. அர­சியல் ப-ழி­வாங்­கல்கள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. எங்­களைப் பழி­வாங்­கு­வ­தற்கு எப்.சி.ஐ.டி. எனும் சட்­ட­வி­ரோத நிறு-­வனம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

பொய்­யான வழக்­கு­களைத் தாக்கல் செய்­வ­தற்கு இன்று எப்.சி.ஐ.டி. உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எப்.சி.ஐ.டி. இற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கினை நீதி­மன்றம் இது­வரை விசா­ரிக்­க­வில்லை. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்­ணாந்­துக்கு எதி­ராக எப்.சி.ஐ.டி. இல் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த வழக்கில் சாட்­சி­யா­ளர்கள் பல மாறு­பட்ட வாக்­கு­மூ­லங்­களை வழங்­கி­யுள்­ளார்கள்.

இன்று அமைச்­சர்கள் இலஞ்சம் வாங்­கு­வ­தாக ஜனா­தி­பதி பகி­ரங்­க­மாக தெளி­வாக குற்றம் சுமத்­து­கிறார். இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு நாம் முக்­கிய 10பேர் தொடர்பில் முறை­யிட்டோம். அது  தொடர்பில் விசா­ரணை இடம்­பெ­ற­வில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு முதியோர் இருக்கும் வயோ­திபர் இல்லம் என்று அமைச்சர் ஒருவர் விமர்­சித்­துள்ளார்.

இன்று இந்த அர­சாங்கம் நாட்டின் வளங்­களை விற்­பனை செய்­துள்­ளது. நாங்கள் எமது ஆட்­சிக்­கா­லத்தில் பெற்ற கடன்­களைக் கொண்டு நாட்டின் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்டோம். அம்­பாந்­தோட்டை துறைமுகத்தை நாம் அமைத்தோம். சர்வதேசத்தின் கவனம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தின் பின்பு இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இன்று அம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

ARA.Fareel



3 comments:

  1. Muslims have no faith in rebirth . Still they know how they suffered under MR EXECUTIVE PRESIDENT of our country . He should have taken action against them . May be Aluthgama incidence there after no action taken and those involved had blessing from authorities and they were freed . We were at receiving end
    not only this particular incidence throughout in every part of country economic barriers
    Our business were boycotted (No limit Fashion Bug) attacked GREESE YAKA aimed against Muslim
    ladies and numerous incidences There was popular belief greese yaka had blessing from security forces.
    Aluthgama only one incidence.We suffered in every villages for long periods. That was the reason more than ninety persontage votes against. Its a proof and good reply to them.
    We Muslims believe particular ministers not responsible for this .Previous government under EXECUTIVE PRESIDENT responsible and Muslims given their reply
    Under the Yahapalna government also its continued .

    ReplyDelete
  2. Dear Mr Mahinda, the only question Muslims want answered is why you did not act against the perpetrators when you had power. If you can give a reasonable answer to that, the Muslims will vote for you. But you cannot give an answer to that can you?
    Allah is Great! To Him we belong, to Him we return.
    You Mr Mahinda, are just a speck of dust

    ReplyDelete

Powered by Blogger.