Header Ads



அக்குறணை மக்கள் பூரண, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

அக்­கு­றணை நகரை வெள்ள அனர்த்­தங்­க­ளி­லி­ருந்தும் பாது­காக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அக்­கு­றணை மக்கள் தமது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வேண்டும் எனவும். அவ்­வாறு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­பட்­டாலே இதற்கு ஓர் நிரந்­தரத் தீர்வு காண­மு­டி­யு­மெ­னவும் அக்­கு­றணை பிர­தேச சபைத் தலைவர் இஸ்­திஹார் இமா­துதீன் தெரி­வித்­துள்ளார்.

முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள அக்­கு­றணை நகரின் வெள்ள தடுப்­புப்­ப­ணிகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் வெள்ள அனர்த்­தங்­களைத் தடுப்­ப­தற்கும் நிரந்­தர தீர்­வினை பெற்றுக் கொள்­வ­தற்கும் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசேட செய­லணி தாம­த­மின்றி தனது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். அக்­கு­றணை மக்கள் தற்­போது பிங்கா ஓயாவை சுத்­தி­க­ரிப்­பது போன்ற ஆரம்ப சிர­ம­தானப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

அக்­கு­றணை பிர­தேச சபை  வெள்ள அனர்த்­தங்­களைத் தடுக்கும் செயற்­திட்­டங்கள் தொடர்பில் மக்­க­ளையும் வர்த்­த­கர்­க­ளையும் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோருடனும் தொடர்புகளைப் பேணி வருகிறது என்றார்.

No comments

Powered by Blogger.