Header Ads



இரகசியங்களை வெளியிடும், அமைச்சர்கள் குறித்து விசாரணை

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதியின்  கட்டளைக்கமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த அமைச்சரவை சந்திப்பின் போது, இந்தியாவின் ​“றோ“ அமைப்புக் குறித்த தகவலை 4 அமைச்சர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக “ த ஹிந்து” நாளிதழின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  இந்த விடயம் குறித்து, ஜனாதிபதியின் கட்டளைக்கமைய விசேட விசாரணைக் குழு அலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட பல வகைகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.