Header Ads



இரகசியப் பொலிஸாருக்கு முன், வாக்குமூலம் கொடுக்கத் தயார்

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய இருவரையும், கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலமளிக்க எந்த நேரத்திலும் தான் தயாராகவிருப்பதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலமளிப்பது தனது கடமையென்று தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் இரகசியப் பொலிஸாருக்கு முன்பாக தன்னிடம் வாக்குமூலம் பெறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன் வைப்பதற்கு தன்னிடமும் சில தகவல்கள் இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.