Header Ads



"இதனை நாங்கள், இழந்து விடக்கூடாது"

நாட்டை சீரழித்தவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ‘விருட்சம் நகர்’ ‘சுபிட்சம் நகர்’ வீடமைப்பு கிராமங்களை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாசா, 

நாட்டை சீரழித்து நாட்டை அழித்தவர்கள் மீண்டும் இப்போது மக்கள் மத்தியில் வந்து நாடகமாடுகின்றனர்.

நாட்டில் இன வாதத்தை தூண்டி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை சீரழித்தவர்களை மக்கள் துரத்தி அடித்தார்கள். மக்களால் துரத்தியடிக்கப்பட்ட இவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க மக்கள் மத்தியில் வந்து நாடகமாடுகின்றனர். இவர்கள் தொடர்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் சக வாழ்வும் இன ஐக்கியமும் நல்லிணக்கமும் தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் இழந்து விடக்கூடாது. நாட்டில் வீட்டுக்கனவை நிறைவேற்றி வருகின்றோம்.

No comments

Powered by Blogger.