Header Ads



இலங்கையில் வாகனங்களுக்கு பாரிய, தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு

இலங்கையில் நாளுக்கு நாள் வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது மேலும் வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சமகாலத்தில் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே வாகன அதிகரிப்பிற்கு பிரதான காரணம் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் பாரிய வாகன தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் சம்பத் மேரென்சினே தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கமைய நாட்டில் ஏற்படவுள்ள வாகன தட்டுப்பாடினை தடுக்க முடியாமல் போய்விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.