Header Ads



கைவிடப்பட்டுச் சென்ற, குழந்தை மீட்பு (படம்)


குருணாகலை சுற்றுவட்டத்திற்கு அண்மையிலிருந்து பிறந்து சில தினங்களே ஆன சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த சிசுவைக் கண்ட நபர் ஒருவர் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் அறிவித்ததை அடுத்து, பொலிஸ் அதிகாரிகள் வந்து குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தை தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த குழந்தையை கைவிட்டு சென்ற நபரை குருணாகலை பொலிஸார் தேடி வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

1 comment:

  1. அம்மோ பெரியவேலை அந்த அப்பாவி குழந்தையை கொல்லாமல் அப்படி சரி விட்டு சென்றது.இலங்கையில் அண்மைக்காலமாக திருமணத்துக்கு அப்பால் இவ்வாறு குழந்தைகளை பெற்று கொண்டு போடுறார்கள் அதை நிறுத்தவேண்டுமென்றால் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் அதாவது தந்தையின் பெயரில்லாமல் பதிவு செய்யும் முறை மற்றும் அவ்வாறு பெற்ற பிள்ளையை பொறுப்பெடுக்கும் நிலையத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும்.(நிச்சியமாக இது முஸ்லிம்களுக்கு சரிவராது ஆனால் அந்நிய மதத்தில் திருமணத்துக்கு அப்பால் பிறக்கும் அப்பாவி குழந்தைகளுக்கு உதவும்)

    ReplyDelete

Powered by Blogger.