Header Ads



பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ரகுமான்

மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்றவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். மீ டூ விவகாரம் குறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சினிமா துறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்கவே விரும்புகிறேன்.

மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன என பதிவிட்டுள்ளார். 


No comments

Powered by Blogger.