Header Ads



தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான, நழுவல் நிலைப்பாடுகளே விடுதலைப் போரை வீழ்த்தியது

நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று.1956,1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன. சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக தனிமைப்படுத்தியதும் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான். 1990க்கு பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள், வெளிநாடுகளில் புலிகளுக்கிருந்த ஆதரவுகள், அனுதாபங்கள் இல்லாமல் போனதற்கும் முஸ்லிம்களின் இந்த வெளியேற்றமும் மறைமுகப் பங்காற்றியது. 

இதன் பின்னணிகளில் கூர்மையாகக் கவனம் செலுத்திய இலங்கை அரசாங்கம் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டத்துக்கான தீர்வுகளை பின்னடிப்பதற்கு, தமிழரையும் முஸ்லிம்களையும் பிரித்தாளத் தொடங்கிற்று. இதற்காக தமிழ் மொழிக்கான போராட்டம் வெடித்துள்ள அதே தளத்தின் தாய் மடிக்குள்ளிருந்து பிளவை வளர்க்கவும் சிங்களத் தேசியம் தருணம் தேடிக் கொண்டிருந்தது. இந்தத் தருணத்தை சிங்களத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்தது முஸ்லிம்கள் மீதான புலிகளின் சந்தேகப் பார்வைகளே.

இந்தச் சந்தேகங்களைக் களைவதில் மிதவாதப் போக்குள்ள ஜனநாயக தமிழ் தலைமைகள், சரியாகப் பங்காற்றி, புலிகளின் தவறான நிலைப்பாடுகளை மாற்றுவதற்கு வெளிநாடுகளூடாக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் முஸ்லிம்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளும் வடக்கு, கிழக்குப் போராட்டத்தில் அக்கறையுடன் செயற்பட்டிருக்கும். இவ்வாறு வெளிநாடுகளின் அக்கறையும் தமிழ் தலைமைகள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையும் வெல்லப்பட்டிருந்தால் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் தோற்றிருக்காது. பாரியதொரு தொடர்ச்சியான நிலப்பரப்பில் பொதுவான மொழி, பொது வாழிடம், பொதுக் கலாசாரம், பொதுப் பொருளாதாரங்களுடன் ஒன்றித்து வாழும் பெரும் மக்கள் கூட்டத்தினருக்கு பௌத்த சிங்களத்துக்குச் சமமான ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுத்தருவதில் வெளிநாடுகள் நழுவிக்கொண்டது ஏன்? புலிகளின் போராட்டம் தொடர்பில் சில தமிழ்த் தலைமைகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நிலைப்பாடுகளை எடுத்தமையும், முஸ்லிம்கள் தொடர்பில் புலிகளுக்கிருந்த முரண்பாடுகள், சந்தேகங்களை களையத் தவறியதுமே இதற்கான காரணங்களாகும். 

நீண்டகால வரலாறுடைய வடபுலத்து முஸ்லிம்களை இருமணி நேரம், 24 மணி நேரம், 48 மணி நேரம் என வெவ்வேறு கால அவகாசங்களில் வெளியேற்றியதில் புலிகளுக்கு பல அரசியல், இராணுவ நோக்கங்கள் இருந்தன. தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக மட்டுப்படுத்தி வடக்கில் முஸ்லிம்கள் கைவிட்டுச் சென்றுள்ள நிலபுலங்கள் சொத்துக்களை கையகப்படுத்தல், இதனூடாக தமது போரிடும் படைகளை உற்சாகமூட்டுவது, சிங்கள அரசுகளுடன் தொடர்ச்சியாக கைகுலுக்கி வரும் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகளையும், முஸ்லிம்களையும் காட்டிக்கொடுப்பாளர்களாகக் காட்டுவது என்பவையே அவையாகும். இதற்குப் பலிக்கடாக்களானது வடபுல முஸ்லிம்களே. 

இதற்கும் மேலாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு எனத் தோற்றம் பெற்ற தனித்துவ கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதுதான் பிரத்தியேக காரணமாகவும் கொள்ளப்பட்டிருக்கலாம். இவை தவிர வேறு காரணங்கள் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. எனினும், வடபுல முஸ்லிம்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டமை, இம்மக்களின் பொருளாதார பலம், மற்றும் அன்றைய காலகட்டங்களில் வடக்கில் இருந்த உள்ளக முரண்பாடுகள் சிலவும் வெளியேற்றத்துக்கான உதிரிக்காரணங்களாகலாம்.

ஆனால், இவ்விடத்தில் இரண்டு நிதர்சனங்களைச் சிந்திக்க வேண்டியுள்ளது. புலிகளின் இராணுவ வெற்றிகள் மட்டும் இனப் பிரச்சினைக்கான தீர்வுச் சூழலை உருவாக்கும் என்று நம்பியிருந்த மிதவாதத் தமிழ்த் தலைமைகள், இதில் முஸ்லிம்களுக்குள்ள உரிமைகள் பற்றிச் சிந்திக்காமை, ஏற்கனவே வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள அழைக்க புலிகளை வலியுறுத்தாதமை, என்பவை தமிழ் தலைமைகள் மீதான இடைவெளியை மேலும் தூரமாக்கியது. இவ்விடத்தில் முஸ்லிம் தலைமைகளின் தவறுகளையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

கிழக்கில் உதித்த முஸ்லிம் தனித்துவ கட்சி தன்னை உறுதியாக நிலைப்படுத்திக்கொள்ள வட புல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை இனவாத மூலதனமாக்குவதுடன் மட்டும் நின்று கொண்டது. புலிகளுடனோ அல்லது தமிழ் மிதவாதத் தலைமைகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தி வடபுல முஸ்லிம்களை மீள அழைக்கும் உறவை வளர்க்காதமை இவ்விரு சமூகங்களுக்கு இடையிலும் மன இடைவெளியை வலுவாக்கின.

இதேவேளை போரில் புலிகள் பின்னடைவை சந்தித்தால் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அரசியல் பேச்சுக்கு நகர்ந்தமை, இதற்காக முஸ்லிம் தலைமைகளையும் அணுக முயற்சித்தமை, இவ்விரண்டு வகையான இரட்டை நழுவல் போக்குகளே வடக்கு,கிழக்கு விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து, தமிழ் மொழிச் சமூகத்தினரையும் தனிமைப்படுத்தியுள்ளன.


3 comments:

  1. முஸ்லிம்களின் காட்டிக்கொடுப்பில் எத்தனை படை முகாம்கள் வடக்கிலும் கிழக்கிலும் அழிக்கப்பட்டன. யுத்தத்திலும் பெரும்பான்மையினருடன் சேர்ந்து ஆடிய கூத்தும் கும்மாளத்தையும் மறக்கவே முடியாது. அதை நான் மறந்தாலும் அவர்களால் காட்டி கொடுக்கப்பட்டு இறந்தவர்களின் ஆன்மா எங்களை ஒரு போதும் மன்னிக்காது. விலத்தியே நில்லுங்கள். நாங்கள் இலங்கையில் அடியோடு அழிந்தாலும் பரவாயில்லை. நீங்கள் விலத்தியே நில்லுங்கள்.

    ReplyDelete
  2. Mr Anusath 1990 முன் முஸ்லிம்கள் புலிகளை காட்டிக் கொடுத்தார்கள் என்று ஒரு ஆதாரம் கொண்டுவாங்கள் பார்ப்போம் ஏண்டா நீங்களே உங்களை அழித்துவிட்டு உங்களின் பேராசையின் அழிவை முஸ்லிம்கள் மீது. வீன்பலி சுமத்து கின்றீர் உங்களுக்குள் எத்தனை EPLRF,TELO,3STAR போன்ற இயகங்கள் உருவாகி உங்களையே சாவடித்தீர்கள் இவர்களில் சிலர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து புலிகளை அவர்களுக்கு காண்பித்தார்கள் ஏன் கடைசியில் புலிபயங்கரவாதிகளை இந்துதமிழர்களாகிய உங்களின் சில ( பிள்ளையான்,கருனாவின் படைகளாகிய) புலிபயங்கர வாதிகளே பாசிஷ பிரபாகரனின் கும்பலை அழித்து இலங்கை பூமியில் கொலை கலாச்சாரத்தை இல்லமலாக்கி தற்போது நாட்டுமக்களை பீதி இல்லாமல் நடமாடச் செய்துள்ளார்கள் இந்த உண்மைகள் உமக்கு தெரியாதா அல்லது உண்மையை மறைக்க முயற்சிக்கின்றீரா? உமக்குத்தெரியுமா கெப்டன் செல்லக்கிளியுடன் எத்தனை முஸ்லிம் போராளிகள் கொள்ளப்பட்டார்கள் என்று?

    ReplyDelete
  3. anusanth chandrabal, என்னது முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்களா? ஒரு பெயர் சொல்ல முடியுமா? மாத்தையாவில் இருந்து கருனாவரை எங்களால் ஆயிரம் பெயரை சொல்ல முடியும். அவ்வளவு ஏன்? பொட்டையன் பிரபாகரன் மே 17 உயிரோடு பிடிபட்டு பொண்டாட்டியையும் மகளையும் இலங்கை ராணுவத்துக்கு கூட்டிக் கொடுத்து விட்டு இருந்த தளபதிகளையும் காட்டியும் கொடுத்து விட்டு தானே கோடரிக் கொத்து வாங்கி செத்தான். முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் தான் வெச்சி அழ பிணம் கூட கிடைக்காமல் அழிஞ்சி போனான். புலிகள் சண்டையிட்டது இலங்கை இந்திய ராணுவத்துடன் தான். அவர்களால் அழிக்கப் பட்ட தமிழர்களை விட புலிகளால் அழிக்கப் பட்ட தமிழர்கள் தான் அதிகம், காரணம் ஜனநாயகம் என்னவென்று தெரியாத காட்டுமிராண்டிகள். நீ ஒரு தமிழனுக்கு பிறந்தவனாக இருந்தால் புலிகளை அல்லது இலங்கை ராணுவத்தை காட்டிக் கொடுத்த ஒரு முஸ்லிம் பெயரை சொல்லு இல்லையென்றால் அம்மாவிடம் கேள் உன் சோனகத் தகப்பன் யாரென்று.....!

    ReplyDelete

Powered by Blogger.