Header Ads



அடுத்த ஜனாதிபதி, வேட்பாளர் மைத்திரிதான் - அமைச்சர் ஜோன் அமரதுங்க

நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தேர்தல்களை கண்டு அஞ்சவில்லை. தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடுவார்.

மக்களின் நிலைப்பாட்டை எதிர்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Only way to punish My3 is to give UNP ticket to him for next presidential election.

    ReplyDelete

Powered by Blogger.