Header Ads



தோசை சுடத் தெரியாதவர்களாக, தமிழ் தலைவர்கள் இருக்கிறார்கள் - விக்னேஸ்வரன்

-பாறுக் ஷிஹான்-

முன்னாள் அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் கூறுவார் அரசியலில் சூழ்நிலைக்கேற்ப தோசை பிரட்ட தெரிந்திருக்க வேண்டும் ஆனால் எம் தமிழ் தலைவர்கள் தோசையே சுட தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் என முதலைமைச்சர் சி.வி  சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் சூழல் அரசியலும் நில அபகரிப்பும் யுத்தத்தின் பச்சை முகம் உரை அரங்கு யாழ் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கு நேற்று(20) மாலை நடைபெற்ற போது  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்கினை பெற்று போனவர்கள் இன்று அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்கள் எனவும் இவர்கள் இதற்கான அறுவடையை வெகுவிரைவில் உணர்வார்கள் எனவும் கூறினார். மேலும் ஓர் இனத்தின் இருப்பில் அதன் சூழல் முக்கிய பங்கு வகிப்பதால் அதன் இறைமையை பாதுகாப்பதற்கான வேலைகளில் எமது தமிழ் பேரவை ஆனது நடவடிக்கை எடுக்கும் எனவும் ,இம்மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் கூறினார்.

4 comments:

  1. 2009 மே மாதன் பூஜ்ஜிமாக்கபட நிலையில் இருந்து தமிழர்களைத் தூக்கிவிடும் முயற்ச்சியில் தேசிய சர்வதேசிய ரீதியாக சம்பந்தர் தொடர்ந்தும் சவால்களுடனும் பின்னடைவுகலோடும் வெற்றிபெற்றே வருகிறார். விக்னேஸ்வரன் ஐயா இதுவரை ஏதும் தோசை சுட்டதாக தெரியவில்லையே.

    ReplyDelete
  2. இவரு LTTE ஆளு.

    ReplyDelete
  3. போதிய அதிகாரங்வகள் இல்லா விட்டாலும், விக்கி ஐயா தனது திறமையினால், வடக்கில் சட்டவிரோத-கள்ள குடியேற்றங்களை கட்டுப்படுத்படுத்தி நாட்டுக்கு சேவை செய்துள்ளார்.

    ReplyDelete
  4. இவரின் கருத்துப்படி அவர்கள் தோசை சுடவும் லாயக்கில்லை என்கிறமாதிரி இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.