Header Ads



யானைகளின் பிடியிலிருந்த அலரி மாளிகையின், பணியாளர்கள் மகிந்தவினால் தூக்கப்பட்டனர்

பதவி விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வருகிறார்.

இந்நிலையில் அலரி மாளிகையின் பணியாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிரடியாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சாரதிகள் என அனைவரும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


2 comments:

  1. He can do only this bcs those workers are mostly uneducated and they believe him....whatever... Red as Yellow, Blue to Red...

    ReplyDelete
  2. Good thing, let the world see how so called leaders act in this country.

    ReplyDelete

Powered by Blogger.