Header Ads



இழப்­பீட்­டுக்­கான சட்­ட­மூலம், முஸ்­லிம்­க­ளுக்கு பயன் கிட்டுமா..?

-SNM.Suhail-

இழப்­பீ­ட்டுக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­லக சட்­ட­மூலம்  பொது எதி­ர­ணியின்  எதிர்ப்­புக்கு மத்­தி­யிலும் 16 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டது. சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 59 வாக்­கு­களும் எதி­ராக 43 வாக்­கு­களும் பதி­வா­கி­ன. இந்த வாக்­கெ­டுப்பில் ஜே.வி.பி. கலந்­து­கொள்­ள­வில்லை.

இலங்­கையில்  கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் இடம்­பெற்ற இன மோதல்கள் மற்றும் வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான இழப்­பீட்டு சட்ட மூலம்  பாரா­ளு­மன்ற விவா­தத்­திற்கு எடுத்­து­க்கொள்­ளப்­பட்­டது. இழப்­புக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­ல­கத்தை தயா­ரிப்­ப­தற்கும், இழப்­புக்­கான எதி­ரீ­டு­க­ளுக்கு தக­வு­டைய இன்­ன­லுற்ற ஆட்­களை அடை­யாளம் காண்­ப­தற்கும், அத்­த­கைய ஆட்­க­ளுக்குத் தனி­யான மற்றும் கூட்­டாக இழப்­புக்­கான எதி­ரீ­டு­களை வழங்குவதற்­கென ஏற்­பாட்டைச் செய்­வ­தற்கும், 1987 ஆம் ஆண்டு 29 ஆம் இழக்க ஆட்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளித்தல் ஆத­னங்­க­ளையும் கைத்­தொ­ழில்­க­ளையும் புன­ர­மைத்தல் அதி­கா­ர­சபை சட்­டத்தை நீக்­கு­வ­தற்கும் அத்­துடன் அவற்­றோடு தொடர்­பு­பட்ட அல்­லது அவற்றின் இடை நேர்­வி­ளை­வான எல்லாக் கரு­மங்­க­ளுக்கும் ஏற்­பாடு செய்­வ­தற்­கு­மான கார­ணிகள் உள்­ள­டக்­கப்­பட்டு பாரா­ளு­மன்றில் விவாதம் இடம்­பெற்­றது.

இந்த சட்­ட­மா­னது புலி­க­ளுக்கு ஆத­ர­வா­னது என கூட்டு எதி­ர­ணி­யினர்  கடந்த புத­னன்று பாரா­ளு­மன்றில் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தனர். அத்­தோடு, இவ்­வி­டயம் இன ரீதி­யி­லான கண்­ணோட்­டத்தில் கூட்டு எதி­ர­ணி­யினர் பார்ப்­ப­தையும் அவ­தா­னிக்­க­மு­டி­கின்­றது. இது­த­விர சாதா­ரண சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் இந்த சட்­ட­மா­னது புலி­க­ளுக்கு ஆத­ர­வா­னது, புலி­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க அரசு காய்­ந­கர்த்­தலை மேற்­கொள்­கின்­றது என்­றெல்லாம் குறிப்­பிட்டு வரு­கின்­றனர்.

இது இவ்­வா­றி­ருக்க நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்றில் இடம்­பெற்ற விவா­தங்­க­ளி­லி­ருந்து பல்­பக்க பிர­தி­நி­தி­களின் கருத்­துக்கள் எவ்­வா­றி­ருந்­தன என பார்ப்போம்.

எதிர்க்­கட்சித் தலைவர்

காலம் தாழ்த்­தி­யேனும் இந்த காரி­யா­லயம் உரு­வாக்­கப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது. காரி­யா­லயம் உரு­வாக்­கப்­பட்டு  உண்மை, நீதி, பொறுப்­புக்­கூறல், இழப்­பீ­டுகள் மற்றும்  மீண்டும் இவை  இடம்­பெ­றாமை  என்­பன நிலை­மாறு பொறி­மு­றையின் அம்­சங்­க­ளாகும். இவை நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் முக்­கியம் பெறு­கின்­றது. இது  நீதியை புறக்­க­ணிக்கும் வகையில் அமை­யக்­கூ­டாது. மேலும்  இந்த சட்­ட­மூ­லத்தின் சில ஏற்­பா­டுகள் மூலம் அர­சாங்கம் கொள்கை உரு­வாக்கம்,   இழப்­பீ­டுகள் வழங்கும் சட்­டத்­திலும் சில விட­யங்­களை மேற்­கொள்­ளவும்  உத­வி­யாக அமைய வேண்டும். இது தொடர்பில் சுயா­தீ­ன­மாக  செயற்­பட வேண்டும். இழப்­பீ­டுகள்  வழங்­கு­வது குறித்த வழி­மு­றைகள் அடை­யாளம்  காணப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கே இதில் இழப்­பீ­டுகள் வழங்க வேண்டும். இழப்­பீ­டுகள் என்றால் அதனை எவ்­வாறு வழங்­கு­வது என்ற திட்டம் இருக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் அவர்­களின் எதிர்­கா­லத்தை, அவர்­களின் வாழ்க்­கையை கொண்­டு­ந­டத்த உத­வி­யாக இவை  இருக்க வேண்டும். இளை­ஞர்­க­ளுக்கு  அவர்­களின் எதிர்­காலம் குறித்து ஒரு  வாய்ப்பை அமைத்­துக்­கொ­டுக்க வேண்டும். பொரு­ளா­தா­ரத்தை  கருத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.  அதன் மூல­மா­கவே  மக்கள் சுயா­தீ­ன­மாக வாழ முடியும்.

கெஹெ­லிய ரம்­புக்­வெல

சட்­ட­மூலம் குறித்து எமக்கு சந்­தே­க­முள்­ளது, நட்­ட­ஈடு வழங்­கு­வதில் விடு­த­லைப்­பு­லி­களின் எந்த தொடர்பும்  இல்­லா­த­வர்­க­ளுக்கு மட்­டுமே நட்­ட­ஈடு வழங்க வேண்டும். ஆனால் இந்தக் காரி­யா­லயம் அதனை  எவ்­வாறு உறு­திப்­ப­டுத்தும் என்ற கேள்வி எழு­கின்­றது. விடு­தலைப் புலி­களின் தொடர்­பில்லை என்று எவ்­வாறு உறு­திப்­ப­டுத்­து­வீர்கள். விடு­தலைப் புலி­களின் அமைப்பின் பலர் சிவில் வேடத்தில் இருந்­தனர். அவர்கள் கொல்­லப்­பட்­ட­வுடன் அவர்­களை பொது­மக்கள் என கூறி­வி­டு­வார்கள். ஆகவே இதில் நெருக்­கடி உள்­ளது.

பிர­தமர் ரணில்

 காணா­மற்­போனோர் குறித்து அவர்­களின் குடும்­பங்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்­கி­லேயே இழப்­பு­க­ளுக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­லகம் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. இதில் வெறு­மனே வடக்கு, கிழக்கு பகு­தி­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மட்­டுமே கருத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. வடக்கு, கிழக்கில் மட்­டுமே அவ்­வாறு காணா­மல்­போனோர் பிரச்­சினை இடம்­பெ­ற­வில்லை. தெற்­கிலும் பலர் காண­ம­லாக்­கப்­பட்­டுள்­ளனர்.  ஆகவே அவர்­க­ளையும் கருத்தில் கொண்டு அவர்­க­ளுக்கும் நியா­ய­மான இழப்­பீ­டுகள் கிடைக்க வேண்டும் என்­ப­தற்­காக  காணாமல் போன­வர்கள் குறித்து இழப்­பீடு அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டுள்­ளது. நான்கு உறுப்­பி­னர்­களை கொண்ட சபை மூல­மாக இவை கையா­ளப்­ப­டு­கின்­றது. 

வெளி­வி­வ­கார அமைச்சர்

இழப்­பு­க­ளுக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­லகம் சகல இலங்­கை­யரின் பாது­காப்பு குறித்தும் கருத்தில் கொள்­ள­ப்ப­டு­கின்­றது.  இந்த சட்­ட­மூ­லத்தின் குறிக்­கோள்கள் என்­ன­வெனில், அமைச்­ச­ர­வைக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வது குறித்த விதிப்­பு­ரையை வழங்­கு­வது மட்­டுமே இந்த அலு­வ­ல­கத்தின் கடமை. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில்  பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளுக்கு மட்­டு­மல்ல சகல பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் இது சாரும். இங்கே மனக்­கு­றைக்கு ஆளாக்­கப்­பட்ட நபர் குறித்து கவ­னத்தில் கொள்­ளும்­போது , அர­சியல் அல்­லது சிவில் நெருக்­க­டியில் பாதிப்­புக்­குள்­ளான  சகல மக்­களும் அவர்­களின் உரி­மைகள் பாதிக்­கப்­பட்ட நபர்­களும், வடக்கு கிழக்கு மோதல்கள் என அனை­வ­ரையும் சட்­ட­மூ­லத்­தினால் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது

பிமல் ரத்­நா­யக

வடக்­கி­லி­ருந்து சிங்­கள மக்­களை விரட்­டி­ய­டிக்க வேண்­டு­மென்ற மன அழுத்­தத்தை உரு­வாக்­கி­யது அர­சாங்கம். முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களை தூண்­டி­வி­டவும் அர­சாங்­கமே காரணம். எவ்­வாறு இருப்­பினும் தவ­றுகள் இடம்­பெற்­றன. இப்­போது அர­சாங்­கமும் தீர்­வு­களை நோக்கி பய­ணிக்க விரு­ப­வில்லை.

வடக்கில் சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்கு சம உரிமை உள்­ள­தென எதிர்க்­கட்சித் தலைவர் கூறி­யதை நன் கேட்­டுள்ளேன். மீண்டும் இதனை உறு­தி­ப­டுத்­துங்கள். வடக்கில் அனை­வ­ருக்கும் சம உரிமை உள்­ளது என்­பதை மீண்டும் சம்­பந்தன் கூற வேண்டும். அதுவே சிங்­கள இன­வா­தி­களின் முகங்­களில் சேறு பூசும் வகையாக அமையும் எனக் குறிப்­பிட்டார்.

எம்.ஏ.சுமந்­திரன் 

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இழப்­பீ­டுகள் பற்­றிய அலு­வ­லக சட்டம் குறித்து விவா­தித்­த­போது மாறு­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது. இவ்­வா­றான நிலையில் குறித்த அலு­வ­லகம் கொள்கைத் திட்­டங்­களைத் தயா­ரித்து அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்கு வழங்­கினால் அது அர­சியல் மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய நிலைமை காணப்­ப­டு­கி­றது. இது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாக இருக்கும். எனவே கொள்­கைத்­திட்டம் பற்­றியும் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும்.

 நமக்­குள்ள சந்­தேகம்

இழப்­பீ­டுகள் பற்­றிய கொள்­கை­களை இழப்­பீ­டுகள் பற்­றிய அலு­வ­லகம் தயா­ரித்து அமைச்­ச­ர­வைக்கு அதனை முன்­மொ­ழியும். அதில் யாருக்கு இழப்­பீ­டுகள் வழங்க வேண்டும், இழப்­பீ­டுகள் பற்­றிய மதிப்­பீ­டுகள் என்­பன குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். இந்த செயற்­பாடு சரி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டுமா என்ற சந்­தேகம் எம்­மத்­தியில்  உள்­ளது.

குறிப்­பாக யுத்­தத்தால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­வி­டயம் கருத்­திற்­கொள்­ளப்­ப­டுமா என்ற கேள்வி நம்­மத்­தியில் எழு­கின்­றது.

இழப்­பீ­டுகள் பற்­றிய அலு­வ­லக சட்டம் வடக்­கி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக விரட்­டப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்கு நியாயம் பெற்­றுக்­கொ­டுக்­குமா? என்ற கேள்வி எழு­கின்­றது. வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்டு 28 வரு­டங்­க­ளா­கின்­றன. இவ்­வி­டயம் குறித்து அர­சாங்­கத்­திடம் சரி­யான புள்ளி விப­ரங்­களோ அறிக்­கை­களோ கிடை­யாது. இந்­நி­லையில் வடக்கு முஸ்­லிம்கள் விட­யத்தில் அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்வி நம்முன் எழுகின்றது.

இதற்கு அப்பால் காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சுப்பொத்தானை, மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களிலும் முஸ்லிம்கள் கொத்துகொத்தாகப் படுகொலை செய்யப்பட்டது மட்டுமன்றி வர்த்தகர்களும் கடத்தப்பட்டனர். இவர்களுக்கு குறித்த சட்டம் என்ன நன்மையை வழங்கப்போகின்றது என்கின்ற சந்தேகங்கள் எழுகின்றன.

எனினும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்றோம். கால தாமதமாக இது கொண்டுவரப்பட்டாலும் கூட அதனை நாம் வரவேற்க வேண்டும்.  எனினும், யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும்.  அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது, இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும். மாறாக பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரும் இதன்போது சமமாக பார்க்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

No comments

Powered by Blogger.