Header Ads



தொலைபேசி உரையாடலில் இருப்பது, இவர்கள் இருவரும்தான்

இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வது சம்பந்தமான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று -23- நீதிமன்றில் கூறியுள்ளார். 

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 123 ஒலிப்பதிவுகள் இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன. 

நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் மாதிரிகள் அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.